ஓட்டு போட சொந்த ஊர் செல்ல அலைமோதிய பயணிகள் - கோயம்பேட்டில் மறியல்
சென்னை: தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் வாக்களிக்க அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பேருந்துகள் போதுமானதாக இல்லை என்று கூறி ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 232 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. ஜனநாயகக் கடமையாற்றுவதற்கான வெளியூரில் பணிபுரியும் பலரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

தலைநகர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் தேர்தல் ஓட்டு போடுவதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர். இதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டத்தால் திருவிழா கோலமாக காணப்பட்டது.
வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான நேற்றும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சொந்த ஊர்களுக்கு செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் இயக்கப்படும் பேருந்துகள் போதுமானதாக இல்லை எனக் கூறி சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் தங்களின் உடைமைகளையும் பொருள்களையும் வைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரைந்து வந்து, சமாதானம் செய்தனர். இதனையடுத்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் அனைவரும் வாக்களிக்க சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications