கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களைத் தாக்கித் துரத்திய இலங்கை "காவாலிப் படை"
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கச்சத்தீவு அருகே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
கற்களால் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபகாலத்தில் பல மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. இந்த நிலையில் கற்களால் தாக்குதல் நடத்தியதன் மூலம் தாங்கள் எப்படிப்பட்ட "வீரர்கள்" என்பதை அவர்கள் காட்டியுள்ளனர்.
இந்த மாதம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்தது. மேலும் 60 படகுகளையும் இலங்கைக் க்டற்படை இதுவரை சேதப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications