For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவர் இளைஞர் பேரவை கலைப்பு: தென்னாட்டு மக்கள் கட்சி உதயம்

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை தேவர் இளைஞர் பேரவை கலைக்கப்பட்டு தென்னாட்டு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளது

அகில இந்திய தேவர் இளைஞர் பேரவையின் பொதுக்குழு மதுரையில் கூடியது. அப்போது பேரவையை கலைத்துவிட்டு புதிய கட்சி துவங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து பேரவையை கலைத்துவிட்டு தென்னாட்டு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கட்சியின் நிறுவனர் தலைவர் ஆர்.எஸ். கணேச தேவர் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

தென்மாவட்டங்களில் சாதி மோதல்களை தடுக்க ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மத்திய அரசு விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English summary
All India Thevar Peravai is dissolved and a new party named Thennattu Makkal Katchi has been formed in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X