ஆம்னி பேருந்து கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான் பேருந்து கட்டணம்... ஓபிஎஸ் விளக்கம்
ஆம்னி பேருந்து கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார்.
கோவை: ஆம்னி பேருந்துகள் வசூலிக்கப்படும் கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணங்கள் மாநில அரசு உயர்த்தி உத்தரவிட்டது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் 66 சதவீத கட்டண உயர்வுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக கட்டண உயர்வு என்று சொல்லப்பட்டாலும் எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வை ரத்து செய்ய வேண்டியதுதானே என்றும் பொதுமக்கள் தலையில் ஏன் சுமத்துகிறீர்கள் என்றும் பொதுமக்கள் கேட்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறுத்து கோவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், ஆம்னி பேருந்து கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான் தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான்.
டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.