உரிய நேரத்தில் அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதே மக்கள் போராட்டத்திற்கு காரணம்: கனிமொழி
உரிய நேரத்தில் அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதே மக்கள் போராட்டத்திற்கு காரணம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின் போது, உரிய நேரத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாததே போராட்டத்திற்குக் காரணம் என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரசு நியாயப்படுத்தப் பார்க்கிறது. அநியாயமாக 13 பேரின் உயிர் அரசின் அலட்சியத்தால் போயுள்ளது.
உரிய நேரத்தில் அரசு போராட்டக்காரர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால், மக்கள் போராட்டம் இத்தனை தீவிரமடைந்து இருக்காது. இனியாவது ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications