தமிழக சட்டசபையில் தாக்கலானது லோக் ஆயுக்தா மசோதா.. சிறப்பம்சங்கள் என்ன?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சட்டசபையில் லோக் ஆயுக்தா தாக்கல்..அனைத்து கட்சிகளும் ஆதரவு!- வீடியோ
சென்னை: தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதா மிகவும் வலிமையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டதொடரில் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும்.இந்த லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் யாரும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

18ஆவது மாநிலமாக தமிழகத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு நிறைய அதிகாரங்கள் உள்ளது.
- ஊழல் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் தன்னிச்சையான அமைப்புதான் லோக் ஆயுக்தா அமைப்பு.
- ஒரு ஊழல் புகாரை இந்த அமைப்பு விசாரிக்கிறது என்றால் அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை, தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் எப்படி முழு அதிகாரம் படைத்ததோ அதேபோல் ஊழல் குற்றங்களில் இந்த அமைப்பிற்கு அதிகாரம் உள்ளது.
- ஆளுநரின் அனுமதி பெறாமலே குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தாவுக்கு உரிமை இருக்கிறது.
- லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டால், உடனடியாக இதற்கான குழு உருவாக்கப்பட வேண்டும். இதற்கான தலைவர்கள், மற்றும் உறுப்பினர்களை, ஆளுநர் நியமிக்கும் அதிகாரம் உள்ளது. இதற்காக உறுப்பினர்களை பரிந்துரை செய்யும் குழுவும் அமைக்கப்படும்.
- பொதுவாக முன்னாள் உயர்நீதிமன்ற, செஷன்ஸ், கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகள், இதன் தலைவர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்களை யாரும் குறுக்கிட முடியாது. இவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் போலீசார் யாரைவேண்டுமானாலும் கைது செய்ய முடியும்.
- இந்த மசோதாவின் படி, இந்த சட்ட வரம்பிற்குள் முதல்வரும் வருகிறார். இதனால் இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும். அதேபோல் அமைச்சர்கள், அதிகாரிகளையும் விசாரிக்க முடியும். மேலும் இதில் விசாரிக்கப்படுபவர்களின் பெயர்கள் பொதுவில் வெளியிடப்படும்.
- இதில் குற்றம் உண்மைதான் என்று ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரிந்தாலே பதவியை பறிக்கவும் , சொத்துக்களை முடக்கவும் முடியும். முதல்வர் பதவியை கூட முடக்க முடியும். இதை எந்த நீதிமன்றமும் தடுக்க முடியாது.
- இதில் சாட்சியம் கிடைத்த பின், விசாரணையை எப்போதும்போல நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். ஆனால் லோக் ஆயுக்தா அனுப்பும் வழக்குகள் விரைவில் விசாரிக்கப்படும்.
- முன்னாள் பணியாளர்கள் குற்றம் செய்தது தெரிய வரும் பட்சத்தில் அவர்களின் பென்ஷனை நிறுத்திவைப்பதென்று சில அதிரடி துறை ரீதியான நடவடிக்கைகளை செய்ய முடியும்.
More From
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications