கோவையில் ஆளுநர் ஆய்வு நடத்தியதில் அரசியல் உள்நோக்கம் இல்லை: முதன்மை செயலாளர் விளக்கம்
கோவையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து ஆளுநர் பன்வாரிலாலின் முதன்மை செயலாளர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
சென்னை: கோவையில் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று ஆளுநர் பன்வாரிலாலின் முதன்மை செயலாளர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
கோவையில் சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் என்று ஆய்வு நடத்தினார். மாவட்ட அதிகாரிகளிடம் வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் கேட்டறிந்தார்.

இது ஒரு அரசியல் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்த நிலையில் இந்த புகார் குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் ஆளுநர் மாவட்ட அதிகாரிகளை சந்தித்ததில் துளி கூட அரசியல் இல்லை. இந்த சந்திப்பில் அரசியல் சாசன மீறல் எதுவும் இல்லை. மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் குறுக்குவழியில் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்தது; இந்த சந்திப்பு மூலமாக மாவட்ட வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடிந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications