மீண்டும் களத்தில் குதித்த ஆளுநர் புரோஹித்.. மதுரையில் இன்று ஆய்வு!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதுரை மாவட்டத்தில் தூய்மை இந்தியா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையில் இன்று தூய்மை இந்தியா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களாக தமிழக மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

TN Governor Inspecting Clean India scheme in Madurai

கடந்த 21ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர், இன்று மதுரை மாவட்டத்தில் தூய்மை இந்தியா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் ஆட்சியர் வீரராகவ ராவிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், மதுரையை அடுத்து உள்ள நாகமலைபுதுக்கோட்டையிலும் தூய்மை இந்தியா பணிகள் குறித்து அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தார். பின்னர் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+