தமிழக ஆளுநரின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜகோபால் நியமனம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் புதிய செயலாளராக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா வேறு துறைக்கு மாற்றப்பட்டதால் அவருக்குப் பதில் புதிய செயலாளராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்றுக் கொண்டார். தற்போது அவர் மக்களின் குறைகளை கேட்டறிய தமிழ் மொழி கற்று வருகிறார்.

இந்நிலையில் கோவை உள்ளிட்ட இடங்களில் தூய்மை திட்டம், பயோ டாய்லெட் உள்ளிட்ட திட்டங்களை பார்வையிட்டார். இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா டிட்கோ மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றிய ராஜகோபால் ஐஏஎஸ் ஆளுநரின் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநரின் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜகோபால் நியமனம் https://t.co/iUTjsQakre pic.twitter.com/Bpn9ZUSHCY
— Oneindia Tamil (@thatsTamil) November 29, 2017












Click it and Unblock the Notifications