சசிகலா: தீர்ப்பு வரும் வரை ஆளுநர் பொறுத்திருக்கலாம்.. ஒரு நெருக்கடியும் இல்லை: ப.சிதம்பரம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு பதவியேற்பு செய்து வைக்காமல் ஆளுநர் பொறுத்திருக்கலாம் என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் ஆளுநர் வித்யாசகர் ராவ் பொறுத்திருக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிதம்பரம் கூறியுள்ளதாவது:
அதிமுகவுக்கு சட்டசபை குழு தலைவர தேர்வு செய்ய அனைத்து உரிமையும் உண்டு. அதேநேரத்தில் அப்படி தேர்வு செய்யப்படுபவருக்கு முதல்வர் பதவிக்கான தகுதி இருக்கிறதா? என கேள்வி கேட்க தமிழக மக்களுக்கும் உரிமை உண்டு. இதை ஆளுநர் கேட்க வேண்டும்.

ஒருவேளை சசிகலா தகுதியானவரே என் வலியுறுத்தப்படும் நிலையில் ஆளுநர் ஆலோசித்து முடிவு சொல்வதாக சொல்லலாம். தற்போது சசிகலாவுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு வர உள்ளது.
ஆகையால் ஆளுநர் அந்த தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம். உடனே சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்துதான் வைக்க வேண்டும் என்ற அரசியல் சாசன நெருக்கடி அவருக்கு இல்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலாவுக்கு தகுதி இழப்பு ஏற்படவில்லை எனில் அவருக்கு பதவி பிரமாணத்தை ஆளுநர் செய்துதான் வைக்க வேண்டும்.
இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications