+12, 10-ம் வகுப்பு ரிசல்ட்டில் ரேங்க் முறையை ஒழித்தது நல்லதே...கல்வியாளர்கள் வரவேற்பு
பிளஸ் 2, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை ஒழிக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவித்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்கானது என்று தமிழகக் கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
சென்னை: ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி முதல் 3 ரேங்க் அறிவிக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளதை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அளித்துள்ள பேட்டியில்:
சக மாணவனைப் போட்டியாளனாகக் கருதும் மனப்போக்கை மாற்றிவிடும் அறிவிப்பு இது. மிகுந்த வரவேற்புக்கு உரியது.

25 ஆண்டு போராட்டம்
கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் போராடிவருகிறோம் ரேங்க் முறை வேண்டாம் என்று. அது இப்போதுதான் அரசின் காதை எட்டியுள்ளது.

மன உளைச்சல் இல்லை
ஆனாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். மாணவர்களை நல்ல, சிறந்த குடிமகன்களாக உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். போட்டியாளர்களாக மாணவர்கள் இருந்தால் அவர்கள் மிகுந்த மன உளைச்சல் ஏற்படும்.

கவலை இல்லை
அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகள் வெளியிடும்போது மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒரு மார்க்கில் முதல் இடத்தை இழந்துவிட்டேன் என்று இனி யாரும் கவலை கொள்ள மாட்டார்கள்.

கல்வி வியாபாரத்துக்கு ஆப்பு
கல்விச் சந்தையில் ஈடுபட்டு கோடிகோடியாக பணம் குவிக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள்தான் அதிர்ச்சியடையும். அவர்கள் இனி பெரிய அளவுக்கு கல்வி வியாபாரத்தில் எங்கள் பள்ளி முதலிடம் என்று கூறிக்கொள்ளமுடியாது.
இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications