ஜன.5-க்குள் ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்களை ஸ்டாக் வைக்க அமைச்சர் உத்தரவு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஜன.5-ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்த்தின் சென்னை கோபாலபுரம் போதுவிநியோகத்திட்ட கிடங்கு, அமுதம் நியாய விலை அங்காடிகள், மண்ணெண்ணெய் வழங்கு நிலையம், பண்ணைப் பசுமைக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் காமராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் சர்க்கரை,கோதுமை, சிறப்பு விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதை அவர் பார்வையிட்டார்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையடுத்து , பச்சரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஜன.5-ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, உணவுத்துறை செயலர் சிவதாஸ் மீனா, உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.கொபாலக்கிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கா.பாலச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications