அண்ணாமலைக்கு செக் வைக்கும் தமிழக அரசு! தனியாக வழக்குத் தொடர தீவிர சட்ட ஆலோசனை!
சென்னை: அமைச்சர்கள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே அண்ணாமலை மீது அரசு வழக்கு போட இருப்பதை மூத்த அமைச்சர் கே.என்.நேரு உறுதி செய்துள்ளார்.
திமுக முக்கியப் பிரமுகர்கள் மீதும், மூத்த அமைச்சர்கள் மீதும் Dmk files என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

அண்ணாமலை வெளியிடும் சொத்துப்பட்டியல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஏற்கனவே இணையதளங்களில் உள்ள சொத்து விவரங்களை மறுபடியும் இடம்பெற்றிருந்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இருப்பினும் இதனை இப்படியே விட்டால் அடுத்தடுத்து இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடரக் கூடும் என்பதால் திமுக மிக சீரியஸாக இதனை கையாள்கிறது.
அண்ணாமலைக்கு மன்னிப்பு கேட்க 48 மணி நேரம் கெடு விதித்து திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதோடு, அவதூறு பரப்பியதற்கு இழப்பீடாக ரூ.500 கோடி தர வேண்டும் எனக் கேட்டு அதிர்ச்சி கொடுத்தது.
இது ஒரு புறம் என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை மீது தனியாக ஒரு வழ்க்கு தொடருவேன் என்றும் சும்மா விட மாட்டேன் எனவுன் சீறியிருக்கிறார்.

அண்ணாமலைக்கு திமுக கொடுக்கும் குடைச்சல் போதாதென்று தமிழக அரசு தரப்பிலும் அவதூறு வழக்கு தொடருவதற்கு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
ஏனெனில் அமைச்சர்கள் பலர் மீதும் அண்ணாமலை திமுக பைல்ஸ்ஸில் குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதால் அவர் மீது அரசு சார்பில் வழக்கு தொடரப்படுவது உறுதியாகியுள்ளது.
அண்ணாமலை மீது அரசு வழக்கு போட இருப்பதை அமைச்சர் நேரு நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட உறுதி செய்துள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications