அண்ணாமலைக்கு செக் வைக்கும் தமிழக அரசு! தனியாக வழக்குத் தொடர தீவிர சட்ட ஆலோசனை!
சென்னை: அமைச்சர்கள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே அண்ணாமலை மீது அரசு வழக்கு போட இருப்பதை மூத்த அமைச்சர் கே.என்.நேரு உறுதி செய்துள்ளார்.
திமுக முக்கியப் பிரமுகர்கள் மீதும், மூத்த அமைச்சர்கள் மீதும் Dmk files என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

அண்ணாமலை வெளியிடும் சொத்துப்பட்டியல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஏற்கனவே இணையதளங்களில் உள்ள சொத்து விவரங்களை மறுபடியும் இடம்பெற்றிருந்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இருப்பினும் இதனை இப்படியே விட்டால் அடுத்தடுத்து இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடரக் கூடும் என்பதால் திமுக மிக சீரியஸாக இதனை கையாள்கிறது.
அண்ணாமலைக்கு மன்னிப்பு கேட்க 48 மணி நேரம் கெடு விதித்து திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதோடு, அவதூறு பரப்பியதற்கு இழப்பீடாக ரூ.500 கோடி தர வேண்டும் எனக் கேட்டு அதிர்ச்சி கொடுத்தது.
இது ஒரு புறம் என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை மீது தனியாக ஒரு வழ்க்கு தொடருவேன் என்றும் சும்மா விட மாட்டேன் எனவுன் சீறியிருக்கிறார்.

அண்ணாமலைக்கு திமுக கொடுக்கும் குடைச்சல் போதாதென்று தமிழக அரசு தரப்பிலும் அவதூறு வழக்கு தொடருவதற்கு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
ஏனெனில் அமைச்சர்கள் பலர் மீதும் அண்ணாமலை திமுக பைல்ஸ்ஸில் குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதால் அவர் மீது அரசு சார்பில் வழக்கு தொடரப்படுவது உறுதியாகியுள்ளது.
அண்ணாமலை மீது அரசு வழக்கு போட இருப்பதை அமைச்சர் நேரு நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications