நீட் அநீதி: மாணவர்கள் வெளிமாநிலம் செல்ல தமிழக அரசே உதவ வேண்டும்.. தமிழிசை கோரிக்கை
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்கள் செல்ல வசதியாக, தமிழக அரசே பயண செலவிற்கு பணம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்கள் செல்ல வசதியாக, தமிழக அரசே பயண செலவிற்கு பணம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் சிபிஎஸ்இக்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. தற்போது இதில் சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு உதவும் வகையில் இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய ஆலோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் ''நீட் எழுதச்செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசு ஏற்கவேண்டும்.பணபலம் இன்றி மனபலத்தோடு தேர்வெழுதும் மாணவர்களுக்கு அரசு உதவலாம். மாணவர்கள் அவ்வளவு தூரம் சென்று தேர்வு எழுத அரசுதான் உதவ வேண்டும்'' என்றுள்ளார்.
மேலும் ''மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீட் மையங்களை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். மாணவர்கள்தான் இடங்கள் இல்லையென்று வெளிமாநிலத்தை தேர்வு செய்துள்ளனர்'' என்றுள்ளார். ஆனால் மத்திய அரசின் சிபிஎஸ்இ அமைப்புதான் இடங்களை தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications