2 மின் திட்டங்களை செயல்படுத்த ரூ.1500 கோடி பணம் வேணும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் 2 திட்டங்களை நிறைவேற்ற தேசிய தூய்மை எரிசக்தி நிதியின் கீழ் ரூ.1500 கோடி தேவை என்று பிரதமரிடம் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
தமிழக அரசு 7,145 மெகா வாட் அளவிற்கு காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மூன்றாண்டுகளில் சூரிய சக்தியின் மூலம் 3,000 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
காற்றாலை மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழுவதுமாக பெற தேவையான டிரான்ஸ்பார்மர்களை நிறுவ வேண்டியுள்ளது.
இது தொடர்பாக இருமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சகங்களுக்கிடையேயான குழு நிதியை ஒதுக்க முடியாது என மறுத்துள்ளதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பசுமை நிதியின் கீழ் நிதி ஒதுக்க மறுத்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.