தமிழகம் தீவிரவாதிகளின் சுற்றுலாத்தலம், அவர்களால் குஜராத்துக்கு போக முடியலை: பாஜக

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி: தமிழகமும் தீவிரவாதிகளின் சுற்றுலாத் தலமாகிவிட்டதாக பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குப்புராமுவுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பரமக்குடி ஐந்துமுனை சாலையில் பிரச்சாரம் செய்தார்.

TN has become the tourist spot of terrorists: Pon. Radhakrishnan

அப்போது அவர் கூறுகையில்,

வாஜ்பாய் ஆட்சியின்போது விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருந்தது. பொருளாதாரமும் 8 சதவீதம் உயர்ந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸின் ஊழல் ஆட்சி தான் நடக்கிறது. மோடி குஜராத் முதல்வர் ஆனபோது மாநிலம் ரூ.50 கோடி கடனில் இருந்தது. தற்போதோ குஜராத்தில் ரூ.1.5 லட்சம் கோடி கையிருப்பு இருக்கிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நாட்டின் எல்லையில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் 2 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை மதிப்பதே இல்லை.

தமிழகமும் பயங்கரவாதிகளின் சுற்றுலாத் தலமாக தான் உள்ளது. அவர்களால் குஜராத்திற்கு செல்ல முடியவில்லை என்றார்.

முன்னதாக மோடி கேரளா தீவிரவாதிகள் பயிற்சி பெறும் இடமாகிவிட்டது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+