For Daily Alerts
Just In
உளவுத்துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் அதிரடி மாற்றம்- மன்னார்குடி குடும்ப உறவினர் நியமனம்!
உளவுத்துறையில் மாற்றம் தொடங்கியுள்ளது. ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக உளவுத்துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு நெல்லையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும் சசிகலாவின் மன்னார்குடி குடும்பம் ஆட்சியை கைப்பற்ற துடியாய் துடிக்கிறது.
முதல் கட்டமாக ஆட்சிக்குள் தலையீடுகளை செய்யத் தொடங்கியுள்ளது. இதன்வெளிப்பாடுதான் உளவுத்துறை ஏடிஎஸ்பியான ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜேந்திரன் இடத்தில் நெல்லையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மன்னார்குடி குடும்பத்தின் உறவினர் என்கிறது போலீஸ் வட்டாரங்கள்.
English summary
Sources said that Tamilnadu Intelligence Dept. ADSP Rajendran was transferred by Mannarkudi Family.
Story first published: Monday, December 19, 2016, 18:15 [IST]