கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
சேலம்: சேலம் மாவட்ட கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) கட்சியைச் சேர்ந்த சேலம் மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்தனர்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) கட்சியைச் சேர்ந்த சேலம் மாவட்டத் தலைவர் வேலுமணி தலைமையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) கட்சியின் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஞானஜோதி, செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட நிர்வாகிகள் மாவட்டப் பொருளாளர் சண்முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, ரமேஷ், மோகனவேல், செந்தில்குமார், மாநகர துணைச் செயலாளர்கள் கண்ணன், சங்கர் தருமபுரி நகரச் செயலாளர் பெரியாமி, ஒமலூர் ஒன்றியச் செயலாளர் சுப்ரமணி உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அப்போது துணைப் பொதுச் செயலாளர் துரைசாமி, சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜேந்திரன், சேலம் திமுக வேட்பாளர் உமாராணி, வீரபாண்டி ஒன்றிய துணைச் செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications