குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications