மே தினம்: மதிமுக,தேமுதிக உற்சாக கொண்டாட்டம்
சென்னை: உழைக்கும் வர்க்கத்தினரை உற்சாகப்படும் மே தினம் இன்று கொண்டாடப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், தேசிய முற்றுப்போக்கு திராவிடர் கழகம் சார்பில் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
128 ஆவது மே தினத்தை முன்னிட்டு, இன்று (01.05.2014) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் தாயகத்தில், கழக அவைத் தலைவரும், ம.தொ.மு. பொதுச்செயலாளருமான சு.துரைசாமி அவர்கள் தொழிலாளர் முன்னணியின் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னணியின் தலைவர் செ.முத்து தலைமை தாங்கினார். உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதா, மாவட்டச் செயலாளர்கள், வடசென்னை - ஜீவன், தென்சென்னை - வேளச்சேரி பி.மணிமாறன் மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
விஜயகாந்த் கொடியேற்றம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தொழிலாளர் அமைப்பான தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.
இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க பேரவை கொடியினை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.