ஊழல் கண்களுக்கு எல்லாமே ஊழலாகத் தான் தெரியும்.. தி.மு.க.,வை சாடிய ஜெயக்குமார்
ஊழல் கண்களுக்கு எல்லாமே ஊழலாகத் தான் தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஊழல் கண்களுக்கு எல்லாமே ஊழலாகத் தான் தெரியும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க.,வை சாடியுள்ளார்.
இன்று சென்னையில், மறைந்த உவமைக் கவிஞர் சுரதாவின் 97வது பிறந்தநாள் விழா நிகழ்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜ ன் ஆகியோர் கலந்துகொண்டு அவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதன்பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
மணல் தட்டுப்பாட்டை தீர்க்கவே மணல் குவாரிகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஊழல் செய்வதற்கான திட்டம் என்று சொல்லி இருக்கிறார். ஊழல் கண்களுக்கு தான் எதில் எல்லாம் ஊழல் செய்யலாம் என்பது தெளிவாகத் தெரியும் அதனால் தான் அவர் அப்படி சொல்லி இருக்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும், ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க.,வின் ஆட்சி. அவர்கள் எங்களைச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. கமிஷன் என்கிற சொல்லை தமிழகத்தில் பிரபலப்படுத்தியதே தி.மு.க ஆட்சி தான் . ஆனால், மக்களின் நலன் கருதியே இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல் படுத்தி இருக்கிறார் என்று தெரிவித்தார்.