தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; பைனான்ஸ் செய்கிறார்கள்-அமைச்சர் கருப்பண்ணன் பேச்சு! #farmers
ஈரோடு: தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; வங்கியில் பணத்தைப் போட்டு பைனான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வியாபாரக்கடன் மேளா துவக்க விழாவில் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பேசியதாவது:
அணையில் இருந்து தண்ணீர் கொடுக்கவில்லை என்று விவசாயிகள் தேவையில்லாமல் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இங்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லாதவர் கூட விவசாயி என்ற பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள்.

விளம்பரத்துக்காக போராட்டம்
இவர்கள் எல்லாம் பேப்பரிலும், பத்திரிகையிலும் விளம்பரம் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் விவசாயிகள் பணத்தை வங்கியில் போட்டு வைத்து கொண்டும், பைனான்ஸ் செய்து கொண்டு நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

கோடீஸ்வரர்கள்
விவசாயிகள் யாரும் வறுமையில் இல்லை. அவர்கள் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதியாகவும் தான் இருக்கிறார்கள்.

கோவணம் கட்டிக் கொண்டு...
விவசாயியாக உள்ள ஒருவர் விளம்பரத்துக்காக கோவணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட விண்ணப்பித்து ஊரை ஏமாற்றுகிறார். அணையில் தண்ணீர் இருந்தால் நாங்களே தண்ணீர் திறந்து விடுவோம்.

துடிக்கிறோம்...
இங்குள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடமுடியவில்லையே என்று தினந்தோறும் நாங்கள் துடிக்கிறோம். எங்களை விமர்சனம் செய்தால் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அதிர்ச்சி
மக்களை திசை திருப்பும் செயலில் ஒரு சில விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு கே.சி.கருப்பண்ணன் பேசினார். விவசாயிகளை விமர்சனம் செய்து அமைச்சர் பேசியது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications