தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; பைனான்ஸ் செய்கிறார்கள்-அமைச்சர் கருப்பண்ணன் பேச்சு! #farmers
ஈரோடு: தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; வங்கியில் பணத்தைப் போட்டு பைனான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வியாபாரக்கடன் மேளா துவக்க விழாவில் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பேசியதாவது:
அணையில் இருந்து தண்ணீர் கொடுக்கவில்லை என்று விவசாயிகள் தேவையில்லாமல் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இங்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லாதவர் கூட விவசாயி என்ற பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள்.

விளம்பரத்துக்காக போராட்டம்
இவர்கள் எல்லாம் பேப்பரிலும், பத்திரிகையிலும் விளம்பரம் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் விவசாயிகள் பணத்தை வங்கியில் போட்டு வைத்து கொண்டும், பைனான்ஸ் செய்து கொண்டு நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

கோடீஸ்வரர்கள்
விவசாயிகள் யாரும் வறுமையில் இல்லை. அவர்கள் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதியாகவும் தான் இருக்கிறார்கள்.

கோவணம் கட்டிக் கொண்டு...
விவசாயியாக உள்ள ஒருவர் விளம்பரத்துக்காக கோவணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட விண்ணப்பித்து ஊரை ஏமாற்றுகிறார். அணையில் தண்ணீர் இருந்தால் நாங்களே தண்ணீர் திறந்து விடுவோம்.

துடிக்கிறோம்...
இங்குள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடமுடியவில்லையே என்று தினந்தோறும் நாங்கள் துடிக்கிறோம். எங்களை விமர்சனம் செய்தால் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அதிர்ச்சி
மக்களை திசை திருப்பும் செயலில் ஒரு சில விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு கே.சி.கருப்பண்ணன் பேசினார். விவசாயிகளை விமர்சனம் செய்து அமைச்சர் பேசியது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications