தமிழகத்திற்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும்.. ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி
திமுக தலைவர் கருணாநிதியின் தலைமை தமிழகத்தில் நீடிக்க வேண்டும் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் தலைமை தமிழகத்தில் நீடிக்க வேண்டும் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி அளித்து இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டுக்கும் அதிகமான மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், தமிழகத்திற்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும். கருணாநிதி திமுகவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே தலைவர். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவாக கூடாது.
கருணாநிதி தமிழ்நாட்டுக்கு நிழல் மரம் போல இருப்பவர். அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். அவர் விரைவில் குணமாகி வர வேண்டும், என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications