இன்று வேஷ்டி தினம்... வேஷ்டி கட்டி வேலை பார்த்த நெல்லை பத்திரிக்கையாளர்கள்...
நெல்லை: இன்று வேஷ்டி தினம் கோலாகலமாக பல்வேறு தரப்பினராலும் கொண்டாடடப்ட்டது. நெல்லையிலும் பத்திரிக்கையாளர்கள் வேஷ்டி அணிந்து வேஷ்டி தினத்தை கொண்டாடினர்.
நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமும் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் இன்று வேஷ்டி தினம் கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் விடுத்த வேண்டுகோளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கோ ஆப்டெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் வேஷ்டி விற்பனையும் கணிசமாக அதிகரித்தது.

இன்று வேஷ்டி தினத்தை பலரும் வேஷ்டி அணிந்து சந்தோஷமாக கொண்டாடினர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டது.
வேஷ்டி தினத்தை முன்னிட்டு நெல்லையில் பணிபுரியும் அனைத்து பத்திரிக்கையாளும் வேட்டியணிந்து இன்று பணிக்கு வந்தனர். இருந்தாலும் சில அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் சிலர் வேஷ்டி கட்டாமல்,பேன்ட் அணிந்து வந்தனர்.












Click it and Unblock the Notifications