தமிழகத்தை அதிர வைக்கும் ஐ.டி சோதனைகள் - அச்சத்தில் உறைந்த பா.ஜ.க பிரமுகர்கள்
வருமான வரி சோதனைகளால் விழிபிதுங்கி போயுள்ளனராம் பாஜக பிரமுகர்கள்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து வருமான வரி சோதனைகள் நடைபெறும் நிலையில் சிக்கிய நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைந்திருக்கும் பாஜக பிரமுகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களை வளைத்துப் போட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் நடைபெறுகிறது என்றாலும் ஆதாயம் அடைவதில் பாஜக பிரமுகர்கள்தான் ஏராளமாம்.

தமிழக அரசின் சமூக நலத்துறையில் ஐ.சி.டி.எஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் இந்தத் துறையில் நடக்கும் டெண்டர்களை குறிவைத்து பெரும் கூட்டமே கோட்டை வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதற்காக சமூக நலத்துறையின் உயர் அதிகாரிகளை அணுகினாலும் அனைத்து சாலைகளும் கிறிஸ்டியை நோக்கியே என்பதைப் போல கைகாட்டப்படும். அந்தளவுக்குக் கோலோச்சிய நிறுவனத்தில் ரெய்டு நடத்தி அதிர வைத்தது வருமான வரித்துறை.
ஆளும் கட்சியினரின் வர்த்தகத் தொடர்புகளையும் இந்த நிறுவனம் கவனித்து வந்ததுதான் வருமான வரி சோதனைக்கு காரணம் என்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பிரமுகர்கள் பற்றிய விவரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனராம்.
ஊழல் பணத்தை இவர்கள் கையாளும் விதத்தைத்தான் இத்தனை நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அதன் ஒருபகுதியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டது.
இன்று காலை முதலே நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்ததாரர்களான நாகராஜன், செய்யாதுரை ஆகியோர் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமான துறையிலேயே மத்திய வருமானவரித்துறை நுழைந்துவிட்டதை பல பிரமுகர்கள் எதிர்பார்க்கவில்லையாம்.
தமிழக அரசின் லகான் பாஜகவின் கைகளுக்கு போனதுதான் தாமதம்... மேற்கு மண்டல பா.ஜ.க பிரமுகர் மற்றும் தென்மாவட்ட பாஜக பிரமுகர்கள் கோட்டையின் நட்பு வளையத்தில் இணைந்தனர். இந்த நட்பை பொருளாதாரரீதியாக பலப்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை.
தலைமைச் செயலகத்திலும் இந்த முகங்கள் அடிக்கடி தென்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையின் ஒப்புதல் இல்லாமலே இவர்கள் கோட்டைக்குச் செல்கின்றனர். அரசிடம் ஆதாயம் தேடுகிறார்கள்' என பா.ஜ.க தலைமைக்கே புகார் சென்றது. பா.ஜ.க கட்டுப்பாட்டில் அ.தி.மு.க இருப்பதால்தான், இவர்கள் நினைத்ததைல்லாம் சாதித்துக் கொண்டனராம்.
இவர்கள் சொல்லும் நபர்களுக்கே அரசின் ஒப்பந்தங்களும் கிடைத்து வந்தன. இப்போது ஐ.டி ரெய்டு நடப்பதால் ஆதாயம் அடைந்த பா.ஜ.க நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனராம். அரசின் ஒப்பந்தங்களில் பெறப்பட்ட ஆதாயங்கள் அனைத்தும் வெளிவந்துவிடும்' என்ற அச்சமும் அவர்களை வாட்டத் தொடங்கியுள்ளதாம்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications