அனைத்துக்கட்சி கூட்டம் : பாமக, மார்க்சிஸ்ட், சரத்குமாரின் கருத்து என்ன?
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பாமகவின் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசியதாவது : காவிரி நீர் விவகாரத்தில் நீண்ட நாட்களாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை, இன்று கூட்டப்பட்டது காலம் தாழ்ந்த கூட்டம். இருந்த போதும் ஆக்கப்பூர்வமான கூட்டமாக அமைய அரசுக்க சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறோம். காவிரி நீரானது படிப்படியாக குறைந்து 177.25 டிஎம்சியாக நிற்கிறது.

காவிரி நீர் குறைக்கப்பட்டது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் சொல்கிறது. அதற்கு அதிகாரம் இல்லை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மேல் 7 நீதிபதிகள் அமர்வு, அரசியல் சாசனம் இருக்கிறது என்று அரசிடம் சொல்லி இருக்கிறோம்.
மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மேலாண்மை வாரியம் தன்னாட்சி பெற்ற அதிகாரமுள்ள ஆணையமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம் அது நடக்கும் என நம்புகிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது : 50 ஆண்டுகளாக நடைபெற்று வரும் காவிரிப் பிரச்னையில் போராடி வருகிறோம். உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்த முடியாது என்று கர்நாடகா பிடிவாதமாக இருக்கிறது. மத்திய அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாகவே இருக்கிறது, எனவே தமிழக அரசு பிரதமரை சந்தித்து வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசியதாவது : காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காவிரியில் குறைத்த நீரின் அளவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளட்ட 3 கோரிக்கைகள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. இவையனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதன்முறையாக தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையான காவிரி நீர் விவகாரத்தில் இது வரை தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்ற கருத்தை உடைக்கும் விதமாக காலை முதல் மாலை வரை அனைத்துக்கட்சி கூட்டம் நடந்துள்ளது. மக்களுக்காக அனைவரும் ஒன்று சேர்வார்கள் என்பது உணர்த்தப்பட்டுள்ளது, இந்த ஒற்றுமையானது மக்களின் பிற பிரச்னைகளிலும் இருக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications