குமரிக்கடலில் புதிய மேலடுக்குச் சுழற்சி: தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்- ரமணன்
சென்னை: குமரிக்கடல் அருகே இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. முதலில் விட்டு, விட்டு பெய்த மழை நவம்பர் மாதம் மற்றும் இம்மாதம் முதல் வாரத்திலும் வெளுத்து வாங்கியது. வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

கடந்த சில நாட்களாக மழைக்கான அறிகுறிகள் எதுவும் இன்றி சென்னையில் வெயில் அடிப்பதால் தேங்கியிருந்த வெள்ளநீர் படிப்படியாக வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்தநிலையில் புதிதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், குமரிக்கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு உருவாகிய மேலடுக்கு சுழற்சி நகர்ந்து மாலத்தீவு அருகே நிலை கொண்டிருந்தது. இது தற்போது லட்சத்தீவு நோக்கி நகர்ந்துள்ளது. இந்தநிலையில் குமரிக்கடல் அருகே இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார் ரமணன்
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் வால்பாறையில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தளவாடி, தேவாலா, சின்னக்கலார் பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications