காவிரி: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை - முதல்வர்
காவிரி விவகாரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தமிழகத்தின் உரிமையை விட்டுத்தராது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், மத்திய அரசு அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவதூறு வழக்கைத் தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை தமிழக அரசு எப்போதும் விட்டுத்தராது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனையான காவேரி பிரச்சனையில், நமது உரிமைகளை நிலைநாட்டவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும். #CauveryIssue pic.twitter.com/BnSRC8nVLi
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 31, 2018
மேலும், காவிரி விவகாரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்றும், மத்திய அரசு மீது தாக்கல் செய்துள்ள வழக்கில் உறுதியாக வாதாட வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. ஏப்ரல் 2ம் தேதி தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications