தமிழகத்தில் 20 ஆண்டுகளில் துப்புரவு பணியின்போது 156 தொழிலாளர்கள் சாவு
சென்னை: தமிழகத்தில் சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் 156 பேர் கடந்த 20 வருடங்களில் பணியின்போது உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளன.
சாக்கடை அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து சென்னையிலுள்ள குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு
அந்த மனுவில் "நடப்பாண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், 1993ம் ஆண்டுக்கு பிறகு நடந்த பணியிட விபத்துகளில், உயிரிழந்த கழிவகற்றும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 156 பேர்
அதன்படி, தமிழகத்தில் 1993க்கு பிறகு பணியிடத்தில் நடந்த விபத்துகளில் 156 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இது மீடியாக்களில் வெளியான செய்தி அடிப்படையிலான புள்ளி விவரமாகும்.

அதிக உயிரிழப்புக்கு வாய்ப்பு
ஒருவேளை இதைவிட அதிகமாகவும் தொழிலாளர்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.

புள்ளி விவரம்
எனவே அரசு அதிகாரிகள் உயிரிழந்த தொழிலாளர்கள் குறித்த முழு புள்ளி விவரத்தையும் தயார் செய்து, அவர்கள் குடும்பங்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications