விடிவு வருமா? சென்னையில் மார்ச் 24ல் தமிழக- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை வரும் 24-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இருதரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தையை நடத்த மத்திய அரசும், இலங்கை அரசும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன்படி வரும் 24-ந் தேதி சென்னையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், இலங்கையில் இருந்து 15 மீனவ பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சார்பில் மீனவர்கள் 13 பேரும், அதிகாரிகள் 4 பேரும் புதுச்சேரியில் இருந்து அதிகாரிகள் உட்பட 8 பேரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
முன்னதாக கடந்த 11-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு முன்வந்தது. ஆனால், போதிய கால அவகாசம் இல்லாததால் அத் தேதியில் பேச்சுவார்த்தை நடத்த இயலாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications