கட்சி கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து விலகியதாக கருத நேரிட்டது: சபாநாயகர் தனபால்
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் புகார் கூறி கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் 18 எம்.எல்.ஏக்களும் கட்சியில் இருந்து விலகியதாகவே கருத நேரிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனபால் கூறியதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்களும் ஊடகங்களில் பேட்டி தந்தனர். சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொள்ள பொய் பேட்டியளித்தனர்.
கட்சியில் இருந்து விலகியதாக...
இப்படி கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து 18 எம்.எல்.ஏக்களும் விலகியதாகவே கருத நேரிடுகிறது. புதுச்சேரியில் தங்கியிருந்து விட்டு கட்சி மற்றும் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பொய் கூறியுள்ளனர்.
பொய் தகவல்
என்னிடம் அளித்த விளக்க அறிக்கையில் பொய்யான தகவலைத் தெரிவித்தனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமீது பொய்யாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
பதவி தந்தது பிடிக்கவில்லை
ஓபிஎஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜனுக்கு பதவி தந்தது பிடிக்காமல்தான் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஜக்கையனைப் பொறுத்தவரையில் அவர் அளித்த விளக்கம் ஏற்பட்டது.
ஜக்கையன் ஆதரவு
அவர் தம்முடைய விளக்கத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க தாம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதாக கூறியிருந்தார். ஆகையால் ஜக்கையன் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டேன். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தொடர தாம் ஆதரவு தருவதாகவும் ஜக்கையன் கூறினார்.
இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.