தமிழகம், புதுவையில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு தொடங்கியது - 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து ஆயிரத்து 140 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
Recommended Video

சென்னை: தமிழகம், புதுவையில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. இரு மாநிலங்களிலும் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். பொதுத்தேர்வுக்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேர். மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேர். பள்ளி மாணவ-மாணவிகள் தவிர தனித்தேர்வர்களாக 36,649 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு கூடுதலாக 237 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க 6,900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிட் அடித்தல், காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுவது உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications