அகில இந்திய சி.ஏ., தேர்வில் தமிழக மாணவர் ஸ்ரீராம் முதலிடம் !
சென்னை: அகில இந்திய பட்டய கணக்காளர் (சி.ஏ.) இறுதித் தேர்வில் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சி.ஏ. தேர்வில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.icai.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இதில், தமிழகத்தின் சேலம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரின் மகன் ஸ்ரீராம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 800-க்கு 613 மதிப்பெண்கள் (76.63 சதவீதம்) பெற்றுள்ளார். இவரது தாயார் நூலகராக பணியாற்றி வருகிறார்.
இது குறித்து ஸ்ரீராம் கூறுகையில், லட்சிய படிப்பில் முழுகவனம் செலுத்தி படித்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. தினமும் 2 மணிநேரம் மட்டும்தான் படிப்பேன். என்ன படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு படித்தால் இந்த வெற்றி கிடைத்ததாக கூறினார்.
அதேபோல், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கட விஸ்வ உபேந்திரா 610 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்த யாஷ் மனோஜ் குமார் கோயல் 599 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.
சி.ஏ. தேர்வில் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது முறையாக அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ முதலிடம் பிடித்தார். இவர் 800க்கு 595 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications