திமுகவிடம் தனித் தொகுதிகளை அதிகம் கேட்காத இளங்கோவன்... காங்கிரஸில் இப்படியும் ஒரு 'பஞ்சாயத்து'
சென்னை: திமுகவிடம் இருந்து கணிசமான தனித் தொகுதிகளை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கேட்டுப் பெறவில்லை என்று புதிய பஞ்சாயத்து வெடித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 தனித் தொகுதிகள்.
ஆனால் 8 தனித் தொகுதிகளை திமுகவிடம் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரான ஜெயக்குமார்.

இது தொடர்பாக சோனியா, ராகுல் காந்தியிடம் புகார் தெரிவித்துவிட்டு டெல்லியிலேயே முகாமிட்டிருக்கிறார் ஜெயக்குமார். இது குறித்து ஜெயக்குமார் கூறியதாவது:
234 தொகுதிகளில் 46 தொகுதிகள் தனித் தொகுதிகள். தலித் மக்கள் 19.5% பேர் உள்ளனர். எங்களுக்குக் கூடுதலாகக் கொடுக்க வேண்டிய 4 தொகுதிகளை தி.மு.கவே வைத்துக் கொண்டது.
இதை இளங்கோவன் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இளங்கோவன் அக்கறை காட்டவில்லை.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications