For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 காலிப் பணியிடங்களுக்கு அடுத்தாண்டு பிப். 19ல் தேர்வு

தமிழகத்தில் உள்ள குரூப் 1 காலியிடங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள குரூப் 1காலியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது.

85 உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC announces group-1 Examination

தமழக அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.

அந்த வகையில் 29 துணை கலெக்டர், 34 துணை காவல் கண்காணிப்பாளர், 8 உதவி கமிஷ்ணர் உள்ளிட்ட 85 இடங்களை நிரப்ப வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்வு நடத்திவுள்ளது.

இதற்கு ஆன்லைன் மூலம் இன்றே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஒப்படைக்க டிசம்பர் 8ஆம் தேதி கடைசி நாளாகும்.

19ஆம் தேதி முதல்நிலை தேர்வும் இதைத்தொடர்ந்து பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TNPSC has announced group 1 examinations and the exams will be held on 19th of February. Candidates can apply through online from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X