குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு- 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நடப்பாண்டிற்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று தேர்வாணைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த கல்வி ஆண்டில் 14 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நடப்பாண்டில் மாவட்ட கல்வித் துறை அதிகாரி, சுகாதாரத் துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்கள், குரூப் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும். இதற்கான தேர்வுக் கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது"என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications