அப்பாவி குழந்தைகளை கொன்ற தீவிரவாதிகள் மனிதராக இருக்க தகுதியற்றவர்கள்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை:பெஷாவர் தாக்குதலுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், அத்தாக்குதலில் இதுவரை பள்ளிக்குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. மேலும் அங்கு குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் மிகவும் கொடூர மனம் படைத்தவர்கள் என்பதிலும், தங்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளிடம் கூட நேசம் பாராட்டாத அயோக்கியத்தனமும், இரக்கமற்ற அரக்க மனமும் படைத்தவர்கள் என்பதிலும் சந்தேகம் இருக்க முடியாது.
எதிரியின் குழந்தையாக இருந்தாலும், அம்முகம் காணும் போது, ஏற்பட வேண்டிய பாச உணர்வு அற்றுப்போனவர்களாகவே குழந்தைகளை கொன்ற கொடியவர்கள் இருக்க வேண்டும். ஏனெனில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றுள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்களைக் காணும் போது நாகரீகமும், அறிவு முதிர்ச்சியுமற்ற காட்டுமிரண்டிகளாக, மனிதமிருகங்களாக மாறிவிட்டார்களோ என்று மனம் பதைபதைக்கிறது.
உலகின் எந்தப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலும், மிகவும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும், மட்டுமல்ல, சம்பவத்தில் ஈடுபட்டவர்களைச் கண்டறிந்து தாமதமின்றி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மதங்களை நுழைத்து யாரும் குளிர்காய கூடாது.
ஆகவே பாகிஸ்தான் அரசு பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, இதுவே கடைசியான நிகழ்ச்சியாக இருக்க வேண்டிய அளவுக்கு கடும் நடடிவக்கைகள் எடுக்க வேண்டும். தயவு தாட்சிசண்யம், இரக்கம் போன்ற எந்தச் சலுகையும் அக்கயவர்களுக்கு தரப்படக் கூடாது என்று தமுமுக வலியுறுத்துகிறது.
இறந்தவர்களின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவர்களின் வேதனையில் தமுமுகவும் தன்னை இணைத்துக் கொள்கிறது அவர்களுக்கு பொறுமையைத் தர இறைவனை வேண்டுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications