கருணாநிதி உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி.. பக்கத்தில் முரசொலி!
கண்ணாடி பேழையில் இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டது.
Recommended Video

சென்னை: கருணாநிதி உடல் உள்ள கண்ணாடி பேழையில் இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டது.
கருணாநிதி நேற்று உடல் நல குறைபாடு காரணமாக காலமானார். அவரது உடல் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லங்களில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ஓமந்தூரார் எஸ்டேட் அருகில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. அவரது உடல் உள்ள கண்ணாடி பேழையில் இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது.
"தலைவர் கலைஞர் மறைந்தார்" என்ற செய்தி வெளியிடப்பட்ட முரசொலி நாளிதழ் கண்ணாடி பேழையில் கருணாநிதி உடல் அருகே வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான இடங்கள் முரசொலி அலுவலகம் மற்றும் அண்ணா அறிவாலயம் ஆகியவை ஆகும்.

ஆட்சியில் இருந்த போது தனது சாதனைகளை பறைசாற்றுவதற்கும் ஆட்சியில் இல்லாத போது ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக் காட்டுவதற்கும் இந்த நாளிதழ் பெரு துணையாக இருந்தது. இந்த நாளிதழில் உடன்பிறப்பே என்ற தலைப்பில் கருணாநிதி எழுதிய கடிதம் பிரபலம் ஆகும்.
நாளை மறுநாள் 77-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது கருணாநிதி தொடங்கிய முரசொலி நாளிதழ். கடந்த ஆண்டுதான் இந்த நாளிதழ் தன் பவள விழாவை கொண்டாடியது.












Click it and Unblock the Notifications