கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து.. 12 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை.. உறவினர்கள் பெரும் கவலை
கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அவர்களதுஉறவினர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை: கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 12 ஆகஉயர்ந்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள மீனாம்பாள் சாலையில் பேக்கரி ஒன்று இயங்கி வந்தது. அந்த பேக்கரியில் கடந்த 15ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் 6 போலீசார் உள்பட 48க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சைப் பலனளிக்காமல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்தனர். அதே போன்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்தார்.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிஞர் கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்த நரேஷ், முத்தமிழ் நகரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் நேற்று மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜாஉயிரிழந்துள்ளார். இதனையடுத்து கொடுங்கையூர் தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கடுமையான தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் நாள்தோறும் உயிரிழக்கின்றனர். இன்னும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் உறவினர்களிடையே அதிகரித்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications