மினிலாரி மீது மணல் லாரி மோதி விபத்து... சாலையில் கொட்டிய 2 டன் தக்காளிகள்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்த தக்காளி பாரம் ஏற்றி நின்ற மினி லாரி மீது மணல் ஏற்ற அதிவேகமாக சென்ற லாரி மோதிய விபத்தில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 2 டன் மதிப்புள்ள தக்காளிகள் சாலையில் கொட்டி முற்றிலும் நாசமடைந்தன.

கரூரிலிருந்து சித்தலவாய்க்கு தக்காளி லோடு ஏற்றிச்சென்ற மினி லாரி மணவாசி சுங்கச்சாவடி முன்பு உள்ள கே.பி.குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பஞ்சர் ஆனது. இதையடுத்து சாலையோரத்தில் மினிலாரி நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மணல் அள்ள அதிவேகமாக வந்த மணல் லாரி பஞ்சர் ஆகி நின்ற தக்காளி லோடு லாரி மீது மோதியதில் தக்காளி லாரியில் இருந்த தக்காளிகள் சுமார் 2 டன் மதிப்புள்ள தக்காளிகள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தன. இதை அள்ள மக்கள் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tomato lorry met with accident

இதனையடுத்து கரூர் ரோந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தக்காளி அள்ளுவதற்கு குவிந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். நான்கு வழிச்சாலையில் உள்ள ஒரு பாதையை மாற்றி மற்றொரு பாதை வழியாக பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களை இயக்க வைத்தனர்.

Tomato lorry met with accident

இச்சம்பவம் தொடர்பாக மாயனூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மணல் லாரி அருகே சாய்ந்ததையடுத்து அங்குள்ள கிரஷர் வைத்து மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் கூடலூர் டூ நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை எண் 67 ல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊரே சேர்ந்து தக்காளி அள்ளிய கூட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+