மக்கள் கண்ணில் 'தக்காளி சட்னி'யை வரவழைக்கும் தக்காளியின் விலை
சென்னை: தமிழகத்தில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கவலை அடைய வைத்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் துவங்கியதில் இருந்தே வெயில் கோரத் தாண்டவம் ஆடியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வறட்சி ஏற்பட்டது. இதையடுத்துதக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.

விளைச்சல் குறைவால் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ. 65க்கு விற்பனையாகிறது. தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
வரத்து குறைவாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் தக்காளியின் தரமும் சரியில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மழை பெய்து வருகின்றபோதிலும் தக்காளி விளைச்சல் அதிகரித்தால் தான் விலை குறையும். அதனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தக்காளியின் விலை குறைய வாய்ப்பு மிகவும் குறைவு என்று கோயம்பேடு வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கோவையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கும், திருப்பூர், சேலத்தில் ரூ.70க்கும் விற்பைனயானது. வெங்காயத்துடன் போட்டி போட்டு பணக்கார குடும்பத்தில் சேர தக்காளியும் துடிப்பதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பெங்களூரில் கடந்த வாரம் தக்காளியின் விலை சென்ச்சுரி அடித்து மக்களின் மனதில் இடியை இறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications