தக்காளி கிலோ ரூ. 10க்கு விற்பனை... குப்பையில் கொட்டும் விவசாயிகள்
சென்னை: தக்காளி ஒருகிலோ ரூ.10க்கும், வெங்காயம் கிலோ ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து வருகின்றனர். தர்மபுரி, ஓசூர் உள்பட பல பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டி வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஓட்டன்சத்திரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, பெரியபாளையம் உள்பட பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வந்து குவிகிறது. இது தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி லாரியாக தக்காளிகள் குவிந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், இப்போது திடீரென விலை குறைந்து 10 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெட்டி பெட்டியாக அதிக அளவில் தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.

சென்னையில் காய்கறிகள் விலை
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தக்காளி குவியல் குவியலாக தரையில் வீசப்பட்டுள்ளது. உண்மையிலேயே விவசாயிகளிடம் தக்காளியை கிலோவுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய்க்குள் தான் மொத்த வியாபாரிகள் வாங்கி விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

விளைச்சல் அதிகரிப்பு
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, தேவத்தூர்,16.புதூர், பெரியகோட்டை, கப்பல்பட்டி,அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, ஒடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தக்காளி பயிர் செய்துள்ளனர். கடந்த ஆண்டு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்ததால், அதே போல இந்த ஆண்டும் பயிர் செய்தனர்.

விலை வீழ்ச்சி
ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து பயிர் செய்தனர். ஆனால் சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்தால் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.80 வரை விற்பனையாகிறது. இந்த விலை, தக்காளி பறிக்க கொடுக்கப்படும் கூலிக்கு கூட வரவில்லை என விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

குப்பையில் கொட்டும் அவலம்
கடந்த ஆண்டு ஒரு பெட்டி அதிகபட்சமாக ரூ.550 வரை விற்பனையானது.ஆனால் இந்த ஆண்டு அதே தக்காளி ஒரு பெட்டி ரூ.80 வரை விற்பனையாகிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கிடைப்பதே அரிதாக உள்ளது என்று கூறும் விவசாயிகள் தர்மபுரி, ஓசூர் உள்பட பல பகுதிகளில் தக்காளியை குப்பையில் கொட்டி வருகின்றனர்.

வெங்காயம் விலை வீழ்ச்சி
இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் மலிந்து 1 கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் லாரிகளில் கொண்டு வரப்படுவதால் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

காய்கறிகள் விலை மலிவு
வெண்டைக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், கோஸ் உள்ளிட்ட மற்ற காய்கறிகள் விலை 25 ரூபாய்க்கு மேல் உள்ளது. புதினா, கொத்தமல்லி கட்டு 5 ரூபாய்க்கு கிடைக்கிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications