கதிராமங்கலத்தில் 3வது நாளாக கடையடைப்பு- கொந்தளிப்பில் மக்கள்
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் கதிராமங்கலத்தில் இன்று 3 வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்: கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசார் 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பதித்த குழாய்கள் பழுதடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்களை நாசமாக்கி வருகின்றன. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் 7 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 30ம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
அதிர்ச்சியும் பதற்றமடைந்த கிராமத்தினர் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், 9 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் சனிக்கிழமையன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடைப்பு ஏற்பட்ட ஆழ்துளை கிணற்றை முற்றுகையிட வந்த 75 பேரை போலீசார் கைது செய்தனர். 3வது நாளாக இன்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேற்று மாலை கதிராமங்கலம், நருவேலி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, கச்சா எண்ணெய் கலந்ததால் கலங்கலான தண்ணீரை பொதுமக்கள் காண்பித்தனர். அதனை பார்த்த அவர், இப்பகுதியில் தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர், லாரி மூலம் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
எண்ணெய் கிணறு தோண்டுவதற்காக வந்த நிறுவனத்தினால் வயல்கள் பாலைவனமானதோடு, குடிநீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட வேண்டியுள்ளது. சுவையான ஆற்று நீர் குடித்த மக்கள் லாரி மூலம் விநியோகிக்கும் தண்ணீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications