ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா?.. ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது வணிகர்கள் பாய்ச்சல்
விழுப்புரம்: திருப்பூரில் பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்துகின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது திருப்பூரில் பெண்கள் மீது வெறித்தனமாக போலீஸார் நடத்திய தடியடி, ஏடிஎஸ்பி பாண்டியராஜன் என்பவர் பெண்ணின் கன்னத்தில் அறைந்தது உள்ளிட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்தார்.

அவர் பேசுகையில், திருப்பூரில் காவல் துறை அதிகாரி பெண்களை தாக்கியது ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என ஐயப்பட வைக்கிறது.
திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் பெண்களை தாக்கிய காவல் துறை அதிகாரியின் செயல் கண்டிக்கதக்கது. யாரை தாக்க வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு போராடுகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை விடுத்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பிரதமர் பேச வேண்டும். டெல்லியில் கடந்த 30 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். வணிகர்களை வஞ்சிப்பதை போலவே மத்திய அரசு விவசாயிகளையும் வஞ்சிக்கிறது. பிரதமர் விவசாயிகளை அழைத்து பேசி அரசால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விவசாயிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications