ஊருக்குபோன மக்கள் மொத்தமாக திரும்பியதால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மொத்தமாக சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இருந்து கல்வி கற்கவும், தொழில் நிமித்தமாகவும், பணி புரிவதற்கு என்பன உள்ளிட்ட பல காரணங்களுக்காக தினமும் ஏராளமானோர் சென்னையில் வந்து குடியேறுகிறார்கள்.
பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு இவர்கள் சென்று திரும்புவது வழக்கம்.

3 நாட்கள் விடுமுறை
இவ்வாண்டு பொங்கல் திருநாள், வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. எனவே பலரும் புதன்கிழமை இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் விழாக்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்துவிட்டதால், சொந்த ஊர்களில் இருந்து திங்கள்கிழமையான இன்று சென்னை வந்தடையும் வகையில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சிறப்பு பஸ்கள்
மக்களின் வருகைக்காக சிறப்பு பஸ்களை தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கிவருகிறது. பொங்கல் பண்டிகைக்காக 6,832 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதுதவிர, சொந்த கார்கள், வாடகை கார்களில் சென்னை திரும்பும் மக்களும் அதிகம்.

அதிகாலையில் டிராபிக் ஜாம்
இதனால் இன்று அதிகாலை முதலே சென்னையின் பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீசார் பெரு முயற்சி
பேருந்துகளை நீண்ட நேரம் நிற்க அனுமதி மறுத்தும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் பலவிதமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications