காவிரி மேலாண்மை வாரியம் கோரி.. உண்ணாவிரதத்தில் குதித்தார் டிராபிக் ராமசாமி
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசின் துரோகம் தொடர்கிறது. கடைசி வரை கழுத்தறுப்பது என்பதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. சுப்ரீம் கோர்ட் 6 வார கால அவகாசம் கொடுத்த நிலையில் கடைசி வரை அதை கண்டு கொள்ளாமல், கெடு முடிந்த பிறகு 3 மாத அவகாசம் கேட்டு நாடகமாடி வருகிறது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்த நாடகத்தனத்திற்கு தமிழகத்தில் கடும் கொந்தளிப்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில் பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி இன்று திருச்சியில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக அமைக்கக் கோரியும் திருச்சி அம்மா மண்டபத்தில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.