கனமழை காரணமாக இன்று 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு !
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரம் - தாம்பரம் ரயில் பாதைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வைகை,பல்லவன் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ரயில்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. ரயில்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் டிக்கெட் விலை 3 நாட்களுக்குள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:
புதுச்சேரி - எழும்பூர் விரைவு ரயில்
காரைக்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் பல்லவன்
மதுரை - சென்னை வைகை விரைவு ரயில்
சென்னை எழும்பூர் - திருச்சி சோழன்
சென்னை எழும்பூர் - புதுச்சேரி பாஸ்ட் பாசஞ்ஜர்
இதேபோல், புவனேஸ்வர் - புதுச்சேரி விரைவு ரயில் இன்று பெரம்பூர், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும். மேலும், சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயில் நாளை காலை 7.40 மணிக்குப் பதிலாக காலை 11 மணிக்கு புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று புறப்பட வேண்டிய விஜயவாடா ஜன் சதாப்தி, நியூ ஜல்பைகுரி, அகமதாபாத் நவஜீவன், ஹவுரா கோரமண்டல், அந்தமான், புதுச்சேரி-புதுடெல்லி ஆகிய 6 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புவனேஸ்வர் - புதுச்சேரி விரைவு ரயில் பெரம்பூர், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் இன்று காலை 7.40 மணிக்கு பதிலாக 11 மணிக்கு புறப்படும்.












Click it and Unblock the Notifications