சென்னை பேசின் பாலத்தில் ரயில் பயணிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கும்மிடிபூண்டி ரயில் 2 மணி நேரமாக வராததால் அதிருப்தியடைந்த ரயில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பேசின் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் வழியாக அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் கும்மிடிபூண்டி வழியாக செல்லும். இன்று காலை கும்மிடிபூண்டி செல்ல பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பல பயணிகள் காத்திருந்தனர். ஆனால் காலை 9 மணி முதல் 11 மணிவரை கும்மிடிபூண்டி செல்லும் ரயில் வரவில்லை.
இரண்டு மணி நேரங்களாக காத்திருந்த பயணிகள் பொறுமையிழந்து, பேசின் பாலத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாற்புறங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். போலீசார் வந்து கூட்டத்தினரை சமாதானப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications