சென்னையில் ரயிலில் அடிபட்டு 4 வடமாநிலத்தவர் பரிதாப பலி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ரயிலில் அடிபட்டு 4 வடமாநிலத்தவர் பரிதாபமாக பலியாகினர்.
சென்னை சேத்துப்பட்டு- நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் 4 பேர் ரயில் மோதி தூக்கிவீசப்பட்டனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஒருவர் மட்டும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.
உயிரிழந்த 4 பேரும் வடமாநிலத்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications