ஓட்டு எண்ணும் அதிகாரிகளுக்கு மே 5 முதல் பயிற்சி...: பிரவீன்குமார் அறிவிப்பு
சென்னை: ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி மே 5-ந் தேதியில் தொடங்குவதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். மேலும், இம்முறை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிறிது தாமதம் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரவீன்குமார் கூறியிருப்பதாவது :-
பயிற்சி வகுப்புகள் :
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மே 5-ந் தேதி சென்னையிலும், 6-ந் தேதி கோவையிலும், 7-ந் தேதி மதுரை மற்றும் திருச்சியிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.
பயிற்சி நடக்கும் இடங்களில், அதைச் சுற்றியுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், சட்டமன்ற தொகுதிக்கான தலைமை தேர்தல் அதிகாரிகள், ஓட்டு எண்ணிக்கைக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
அதன்படி ஒரு பயிற்சி மையத்தில் 60 அலுவலர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் 4 மையங்களிலும் 240 அலுவலர்கள் பயிற்சி பெறுவார்கள். அரை நாள் இந்த பயிற்சி நடைபெறும்.
தேர்தல் முடிவுகள் :
பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாக, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஒலி பெருக்கி மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அதோடு, கரும்பலகைகள், மிகப்பெரிய டிஜிட்டல் பலகைகள், இணையதளம் ஆகியவற்றிலும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது தேர்தல் முடிவுகள் தரப்படும்.
தாமதம் ஏற்படலாம் :
மே 16-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் அரைமணி நேரம் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். வேட்பாளர்கள் அதிகமாக இருப்பதால், ஓட்டு எண்ணிக்கை முடிவுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். ஓட்டு எண்ணிக்கை தினத்தன்று முழுமையாக டாஸ்மாக் மதுக்கடைகள் பூட்டப்பட்டு இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications